ஆடாதோடை வேர்

ஆடாதோடைச் செடி--இச்செடியின் வேர்
ஆடாதோடைச் செடி--இச்செடியின் வேர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

*Adhatoda Vasica--Root--(தாவரவியல் பெயர்)

ஆடாதோடை வேர், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஆடாதோடை மூலிகைச் செடியின் வேர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. root of malabar nut herbal plant

விளக்கம் தொகு

இது ஒரு மருத்துவ குணமுள்ள ஆடாதோடை என்னும் மூலிகைச்செடியின் வேராகும்...இந்த வேரினால் இருமல், அக்கினி மந்தம்,சுவேத பித்தம், கஷ்ட சுவாசம், களரோகம் முதலிய நோய்கள் தீரும்...

உபயோகிக்கும் முறை தொகு

ஆடாதோடையின் வேர்ப்பட்டை கபரோகங்களைப் போக்குவதில் சிறந்தது...இதனை நிழலில் உலர்த்திச் சூரணங்களில் கூட்டி உபயோகித்தல் வேண்டும்..இந்த வகையில் ஆடாதோடைச் சூரணம் மிகுந்த பயனளிக்கும்...

ஆடாதோடைச் சூரணம் செய்யும் முறை தொகு

ஆடாதோடை வேர்ப்பட்டை 2 பலம், ஆடாதோடைப்பூவின் கதிர் 4 பலம், பேரரத்தை, சிற்றரத்தை, வாய்விளங்கம், சிறு தேக்கு, கோரைக்கிழங்கு, இச்சிப்பட்டை, கரிமஞ்சள், மிளகு, கண்டங்கத்திரி உலர்ந்த இலை ஆகியவைகளில் ஒவ்வொன்றிலும் 1 பலம்., காஞ்சொறிவேர், தூதுவளை உலர்ந்த இலை வகைக்கு 2 பலம்., அரிசித்திப்பிலி 3 பலம், கோஷ்டம், காட்டாத்திப்பூ வகைக்கு அரை பலம் இவைகளை நன்றாக இடித்துச் சூரணம் செய்து அத்துடன் அரை பலம் சாம்பிராணிப் பதங்கம் கூட்டிக்கலந்து புட்டியில் வைத்துக்கொள்ளவேண்டும்...இந்தச் சூரணத்தில் வேளைக்கு 1/8 ரூபாய் எடை பாலில் கலக்கித் தினமும் இரண்டு வேளை பத்து முதல் இருபது நாட்கள்வரை கொடுத்துவர சீதளசம்பந்தத்தினால் உண்டான சுவாசகாசம், இரைப்பிருமல் போகும்.

  • ஆடாதோடை இலைகளைப்பற்றிய விளக்கங்களுக்கு இங்கு சொடுக்கவும்..[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடாதோடை_வேர்&oldid=1232356" இலிருந்து மீள்விக்கப்பட்டது