திருமாலின் ஏழாவது அவதாரமான இராமனின் பிறப்பு மற்றும் வாழ்க்கையையும், அவன் தன் பத்தினி சீதையைக் கடத்திக்கொண்டுச் சென்ற இலங்கை அரக்க அரசன் இராவணனைப் போரிட்டு வதை செய்ததைப் பற்றியும் சொல்லும் முனிவர் வால்மீகியால் சமசுகிருத மொழியில் இயற்றப்பட்ட ஓர் இந்து இதிகாசம் இராமாயணம்...வால்மீகிக்கு அடுத்தபடியாக கம்பன் இராமாயணத்தைத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார்..சமசுகிருததில் अयण அயண எனில் யாத்திரை/பயணம் என்று பொருள்...ஆகவே இராமாயணம் எனில் இராமனின் யாத்திரை/பயணம் என்றானாலும் கதை என்னும் பாவத்தில் அர்த்தம் கொள்ளப்படுகிறது...