உயிரினங்களுக்கு இயற்கையின் அருங்கொடை மரங்கள்...காய், பழம், கொட்டை முதலிய உணவுகள் மற்றும் பலவிதங்களில் பயன்படும் இலைகள், பூக்கள், பிசின், எண்ணெய் போன்ற மருத்துவப்பொருட்கள், அடுப்பெரிக்க உலர்ந்த மரக்கட்டைகள், பட்டைகள், அடுப்புக்கரி முதலிய பற்பல பொருட்களை மரங்கள் அளிக்கின்றன...குடியிருக்க வீடுகள், கப்பல்கள் போன்ற கட்டுமான வேலைகளிலும் பெரிதும் பயனாகின்றன...இயற்கையாக வளரும் காடுகளைத்தவிர, மனிதர்களால் தேவைக்கேற்ப உண்டாக்கப்படும் காடுகளும் உண்டு...உலகெங்கும் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப பலவிதமான காடுகள் காணப்படுகின்றன...பருவம் தவறாது உலகில் மழை பெய்ய காடுகள் பெரிதும் உதவுகின்றன...சாலையோரங்களில் நிழல் தரும் தருக்களாக மரங்கள் வளர்க்கப்படுகின்றன...காடுகள் ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், புகலிடமாகவும் விளங்குகின்றன...