எப்போதும் நல்ல சொற்களையே சொல்லுங்கள்...தீயச் சொற்களை சொல்லவேண்டாம் என்று வலியுறுத்துவதற்கு பெரியவர்கள் சொல்லும் ஒரு காரணம்:....நம்மைச் சுற்றிலும் எப்போதும் அஸ்து புருஷர் எனக் குறிப்பிடப்படும் தேவதைகள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்...அவர்கள் ததாஸ்து,ததாஸ்து என நாம் சொல்வதை ஆமோதித்துக்கொண்டே இருப்பர்...அவைகளை நல்லவை, கெட்டவை என்று வேறுபடுத்திப் பார்க்கமாட்டார்கள்... ததாஸ்து என்றால் சமஸ்கிருதத்தில் அப்படியே ஆகட்டும் என்று பொருள் உண்டு...ஆகவேதான் தீயச் சிந்தனையிலிருந்து வெளிப்படும் சொற்களைச் சொல்லக்கூடாது என்பது...அதையும்ததாஸ்து என்று ஆமோதித்து விடுவார்களாம் இந்த தேவதைகள்!!!