கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழியாகக் கருதப்படுகிறது.
சிந்து சமவெளி (Indic) சமவெளி நாகரிகத்தில் இம்மொழி இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன.
க ச ட த ப ற - வல்லினம், ங ஞ ந ம ன ண - மெல்லினம், ய ர ல வ ழ ள - இடையினம் என அழகு பெறுவதும் குறிப்பிடத்தக்கது
சிறப்புப் பெயர்கள்
தமிழ் என்ற பொதுவான பெயர் இருந்தாலும் பல காரணங்களுக்காக ஏற்பட்ட பிற பெயர்கள்.
அகத்தியம்: ஆதி சிவன் பெற்றெடுத்து அகத்திய முனிவரால் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டதால் அகத்தியம் என்று பெயர்.
பொதிகை மொழி: பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்பட்டதால் பொதிகை மொழி என்று பெயர்.
தென் மொழி: மிகப் பண்டைய காலத்தில் பாரதத்தின் வடக்கில் வழக்கிலிருந்த மொழி வடமொழி (சமசுகிருதம்) எனப்பட்டபோது, தெற்கில் வழக்கிலிருந்த தமிழ், தென் மொழி எனப்பட்டது.
திராவிடம்: வடமொழியில் தமிழ் மொழியை திராவிட பாஷா என்றே அழைத்தனர்.
தமிழின் மற்ற சிறப்புகள்
உலகிலேயே மிகவும் பழமையான, வளமிக்க உயர்தனிச் செம்மொழிகள் என்று போற்றப்படும் ஐந்து மொழிகளுள் ஒன்று தமிழ்...மற்ற மொழிகள்..கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் மற்றும் இப்ரு...
திராவிடமொழிக் குடும்பத்தில் தாய்மொழியாகப் பேசும் மக்களின் எண்ணிக்கையில் தெலுங்கிற்கு அடுத்த இரண்டாவது இடத்திலுள்ளது...தொன்மையிலும், இலக்கிய, இலக்கண வளத்திலும் திராவிடமொழிக் குடும்பத்தில் தமிழுக்கே முதலிடம்...
இந்திய அரசால் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.
இந்தியாவில் அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஒன்று..தமிழ்.
இந்தியாவில் தமிழ்நாட்டின் ஒரே ஆட்சி மொழியாகவும், புதுச்சேரி, அந்தமான் ஆகிய நடுவண் பிரதேசங்களில் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது...
இந்தியாவைத் தவிர, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக உள்ளது...இலங்கையில் சிங்களத்தோடு தேசிய மொழியாகவும் உள்ளது... மேலும் மலேசியா, மோரீசு, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினர் மொழியாகத் திகழ்கிறது...